search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில செயலாளர்"

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.

    அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.
    • மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் அனுஷா ரவி பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

    மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

    இருப்பினும். தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
    • இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த 8-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் பெயர்கள் மத்திய குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் அகில இந்திய தலைவர் நரேன் ஜெட்டர்ஜி, தேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தமிழக புதிய பொறுப்பாளர்களை டெல்லி நேதாஜி பவனில் அறிவித்தார்.

    இதன்படி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.கர்ணன், மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.கர்ணன் திருப்பூருக்கு முதல்முறையாக வந்தார். அவருக்கு திருப்பூர் எல்லையான தாராபுரம் ரோடு கோவில்வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் துணைத்தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் காளீஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மேலும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் கர்ணனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கர்ணன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருப்பதுடன், மாநில துணைத்தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    ×